search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாயி பலி"

    பொன்னேரி அருகே அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60), விவசாயி. ஆமுர் ஊராட்சியில் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக இருந்தார்.

    நேற்று மாலை அவர் விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மின்சாரம் தாக்கி விவசாயி கன்னியப்பன் மயங்கி விழுந்த நிலையில் மின்சாரத்தை துண்டிக்க கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    வடக்குப்பட்டு கிராமத்தில் பல மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பது பற்றியும், மின் கம்பிகள் தாழ்வாக செல்லுவது குறித்தும் பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தாலேயே விவசாயியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×